Sunday 28th of April 2024 09:01:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிட்னியில் சமூக முடக்கல் உத்தரவு  மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது!

சிட்னியில் சமூக முடக்கல் உத்தரவு மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது!


டெல்டா திரிபு கொரோனா தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் சிட்னியில் சமூக முடக்க உத்தரவு மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

டெல்டா திரிவு வைரஸ் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் கடந்த ஜூன் மாத இறுதி முதல் சமூக முடக்கல் உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிட்னியின் ஏற்பட்ட தீவிர கொத்தணித் தொற்றால் வெடிப்பால் இதுவரை 2,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிட்னி நகரில் இன்று புதன்கிழமை 177 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். 2020 மார்ச் மாதத்தின் பின்னர் நகரில் ஒரு நாளில் பதிவான அதிகளவு தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.

இந்நிலையில் முன்னர் திட்டமிட்டவாறு எதிர்வரும் 30-ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமூக முடக்கல் உத்தரவை விலக்கிக்கொள்ள முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் இன்று அறிவித்தார். ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை சமூக முடக்கல் உத்தரவு நீடிக்கப்படுவதாகவும் அவா் கூறினார்.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக தங்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவா் அறிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE